×

புத்தாண்டையொட்டி இன்று இரவு சாரதா கல்லூரி சாலை புதிய மேம்பாலம் மூடல்

சேலம், டிச.31: புத்தாண்டு தினத்தையொட்டி சாரதா கல்லூரிச்சாலை புதிய மேம்பாலம் இரவு ஒன்றரை மணி நேரம் மூடப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர்.சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் விடுத்துள்ள பத்திரிகை செய்திக்குறிப்பு: புத்தாண்டு தினத்தை (இன்று இரவு) அமைதியான முறையில் விபத்தில்லாமல் கொண்டாட சேலம் மாநகர காவல்துறை விரிவான நடவடிக்கையை எடுத்துள்ளது. முக்கிய சந்திப்புகளான சீலநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி, குரங்குச்சாவடி, 5ரோடு, அண்ணா பூங்கா, அஸ்தம்பட்டி, கலெக்டர் அலுவலகம், சுந்தர் லாஜ்ட், ஏற்காடு ரோடு மற்றம் தேசிய நெடுஞ்சாலைகள் ஆகிய இடங்களில் உதவி கமிஷனர்கள் தலைமையில் வாகன சோதனை நடத்தப்படும். வாகனங்களை அதிவேகமாகவும், குடிபோதை மற்றும் சாலை விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல வழிப்பாட்டு தலங்கள், அதிகபடியாக மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மற்றும் முக்கிய சாலைகளில் கூடுதல் சிறப்பு பாதுகாப்பு  போடப்பட்டுள்ளது.புத்தாண்டு பாதுகாப்புக்கு 500 போலீசாரும், 150 ஊர்காவல் படையினரும், நியமிக்கப்பட்டுள்ளனர். அதே போல முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. புதியதாக அமைக்கப்பட்டுள்ள சென்னை சில்க்ஸ்(சாரதா கல்லூரி சாலை) முதல் ராமகிருஷ்ணா சாலை வரையிலான புதிய மேம்பால சாலை, இன்று இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை, பாதுகாப்பு கருதி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. அந்த வழிகள் தற்காலிகமாக அடைக்கப்படும்.இவ்வாறு போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.

Tags : Saratha College Road New Bridge Closure ,
× RELATED கூலி தொழிலாளி சடலம் மீட்பு